Tuesday 8 July 2014

தொழிலதிபர் யோகம் யாருக்கு...?ஜாதக வழி காட்டல் ஆய்வு-05

இந்த ஜாதகத்தை பாருங்கள்.இவரின் பரம்பரை அதாவது பாரம்பரியம் தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்த விதத்தை பறை சாற்றுகிறது,எப்படி..? யார் ஒருவர் ஜாதகத்தில் ராகு தர்ம பாவமான மேஷம்-சிமம்ம்-தனுசு போன்ற ராசிகளில் இருந்து,அதற்கு பூர்வ புண்ணியத்தோடு ஒரு தொடர்பு ஏற்பட்டால் நிச்சயமாக நல்ல அந்தஸ்த்தை வழங்க போகிறதென்று உறுதியாக நம்பலாம்.அப்பா-அம்மா-பாட்டன்-பாட்டியென முந்தைய தலைமுறைகளில் நேர்மை,உண்மை,தானம்,தர்ம்ம் செய்த விதம் நன்றாக இருந்தால் நீங்க யோகத்தை அனுபவிக்க எவ்வித தடையும் இருக்காது.

இப்பவுள்ள தலைமுறைக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.எனக்கு ஏன் எதுவும் நல்லதாகவே நடக்க மாட்டேங்குதுன்னு குறைபட்டுக்கொள்கிறார்கள்.இது விபரம் புரியாத புலம்பல்.முன்னர் செய்த தவம் பின்னர் உதவி செய்யும்..ஒரு ஜாதகத்தில் நட்சத்திராதிபதி யாரோ அவர் கேந்திர-திரி கோணத்தில் இருக்க வேண்டும்.அதன்படி பூரம் நட்சத்திரம் இதன் அதிபதி சுக்கிரன் ஏழாமிட கேந்திரத்தில் உள்ளது.அதே போல் லக்கின அதிபதி குரு சனி சாரத்தில் -சனி நாலாமிட கேந்திரத்தில்-ராசிக்கு பத்தில் சூரியன்-சூரியனுக்கு நாலில் சந்திரன்.இது போன்று கிரக அமர்வு இருக்குமானால் தொழிலதிபராக குறைவராது.

ஜாதகர் பழனி நகரில் மிகப்பெரிய தங்கும் விடுதி.ரெஸ்ட்ராண்ட்,தேநீர் கடை வாடகை கடைகள் என எந்த நேரமும் பணப்புழக்கம் சிறந்த தொழிலதிபராக திகழ்கிறார்.எமது ஜாதக ஆய்வுகளை விரும்பி படிப்பவர்.அன்மையில் சந்தித்து தனக்குள்ள சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொண்டார்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates