Thursday 15 January 2015

ஆண்மையில்லா ஆண்களை அடையாளம் காண்பது எப்படி..?

இன்று பல திருமணங்கள் விவாகரத்துக்கு போக காரணம் ஆண்மையின்மைதான் காரணமாக உள்ளது.இதை வெளியில் சொல்ல முடியாத காரணத்தால் வெவ்வேறு காரணங்களை காட்டி பிரிந்து வாழ்கிறார்கள்.இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களும் சரியான இல்லற வாழ்வை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பு போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்,அதனை மறைத்தும்,குடும்ப வம்சவழிப்படி இளமையில் சுகரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,நரம்பு கொளாறு உள்ளவர்களுக்கும்,மூலிகை மருந்துகளை அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கும் ஆண்மை கோளாறு வர வாய்ப்புகள் அதிகம்.இதை கொச்சையாக சொன்னால் ஆண்குறி  சோர்ந்துபோய்விடுதல்,விறைப்புத்தன்மை இல்லாதிருத்தல்,துரிதஸ்கலிதம் அதாவது விந்து வெகுசீக்கிரத்தில் வெளியேறுதல்,சில ஆண்களின் விந்தில் உயிரணு இல்லாதிருத்தல் என பல்வேறு காரணங்கள் உள்ளது.இவையெல்லாம் உடலுறவுக்கு தடையாகவும்,திருப்தியில்லா தாம்பத்ய வாழ்விற்கு அடித்தளமாகவும் இல்லாமல் போவதால் பாதிப்பு வந்துவிடும்.

இதை ஜாதகரீதியாக கண்டுபிடித்துவிடலாம்.இதற்குத்தான் பொருத்தம் பார்க்கும்போது,அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு ஆண் ஜாதகத்தில் புதன்-சனி-கேது போன்ற அலி கிரகங்களின் ஆதிக்கம் எப்படி உள்ளதென்பதை கவனிக்க வேண்டும்.லக்கின-ராசியின் மூன்றாமிடம்,எட்டாமிடம்,ஐந்தாமிடம்,ஏழாமிடம் ஆய்வு செய்யப்படவேண்டும்.அதேபோல் யோனிப்பொருத்தம் பார்க்கும்போது இருவருக்கும் பகை மிருகமாக இல்லாமல் பார்ப்பது அவசியம்.

ஆண்-பெண் ஜாதகத்தில் காலபுருஷ ராசியான மேஷத்திற்கு எட்டாமிடம் விருச்சிகம்,இதில் சனி-ராகு,செவ்வாய்-சனி,போன்ற பாவ கிரகங்கள் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும்போது ,ஆண-பெண் குறிகளில் நோய் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.நன்றாக பழகும் சில பெண்கள் உடலுறவில் மிக எரிச்சலுற்று வெறுப்பார்கள்.இதற்கு காரணம் நோயின் வலி வேதனைதான் பிரச்சினையாக இருக்கும்.இந்த மாதிரி அந்தரங்க விஷயங்கள் வெளியில் சொல்லி நிவாரணம் தேடக்கூடியவையல்ல என்பதால் திருமணத்திற்குமுன்பு விழிப்புணர்வு தேவை.இதுதான் விதியென்றால் ஒன்றும் செய்யமுடியாதுதான்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates