Tuesday 8 July 2014

திருமணம் நடக்கவில்லையே..ஏன்..?ஜாதக வழி காட்டல் ஆய்வு -04

இந்த ஜாதகத்தை பாருங்கள்..1975-ம் ஆண்டு பிறந்தவர்.கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி-கன்னி லக்கினத்தில் பிறந்தவர்.மாஸ்ட்டர் டிகிரி எம்.எஸ்.சி முடித்து ஒரு பிரைவேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.இவர் ஜாதகத்தில் இருக்க்க்கூடிய தோஷமென்ன..? பனிரெண்டில் செவ்வாய் ராகு-கன்னியில் குரு-சனி சேர்க்கை.நீங்கள் நடைமுறையில் பார்க்கலாம் ஒருவர் நல்லவராக இருக்கலாம் ரொம்ப நல்லவராக இருக்க்கூடாது.இது பல் வேறு பாதிப்புகளை கொடுக்கும்.பண்ணையாராக இருந்தவர்களெல்லாம் இன்று பழங்கதை பேசி காலத்தை விரையமாக்கியதுதான் மிச்சமென்று ஒரு பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது.அது போல் ஜாதகரின் தந்தை ஒரு பண்ணை வீட்டு பையன் குந்தி தின்றால் குன்றும் கரையும் என்பார்கள்.இருந்த விவசாய நிலங்கள் படிப்படியாய் விற்பனையாகி இன்று ஏதோ கொஞ்சம் உள்ளது.பையன் தன் சுயமுயற்சியில் இருக்கிறான்.சுப கிரகங்கள் கேந்திரத்தில் இருப்பது அவ்வளவு சிறப்பில்லை.ஜாதகரை நல்லவர்தான் என்று சொல்லமுடியும் ஆனால் வல்லமை இருக்காது.அட குடிச்சாலும் பரவாயில்லை நல்லா சம்பாதிக்கிறானே போதாதா..? பையனை திருத்தி கொண்டு வந்து விடலாம் என்று இப்ப உள்ள பெண்கள் நினைக்கிறார்கள்.இதெல்லாம் ஜாதக அமைப்பு என்ன செய்வது..?வயது 39 பெண் தேடி அலைகிறார்.

கிரகங்களின் அமர்வு பிறவிதோஷம் ஜாதகனை உயர்த்தவில்லை.நமது கர்ம வினை நம்மை சுற்றினால் என்ன செய்வது..?வாழும் போது பாவம் செய்ய அஞ்சினால்..வாரிசுகள் வசதியாக வாழ இறைவன் அருள்வான்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates