தற்சமயம் 16-12-2014 ம் தேதி மார்கழி-01ம் நாள் துலாம் ராசியை விட்டு விருச்சிசிகம் ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகியுள்ளார்.இதனால் மேஷம்-ரிஷபம்-சிம்ம்ம்-துலாம்-விருச்சிகம்-தனுசு-போன்ற ராசிகள் பலவீனம் அடைகின்றன.இதனால் திருமணம்-நிச்சயம் செய்வது,தாமதம் அடையும்.வழக்கமாக டூ வீலரில் வேகமாக செல்பவர்கள்,எச்சரிக்கையுடன் செல்வது நல்லது,அவ்வப்போது உடல் நிலையை பரிசோதனை செய்து கொள்வது சிறந்த்து.தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்கள் ,அதிக கடன் வாங்கி தொழில் ஆரம்பிக்கும் முன் யோசிக்க வேண்டும்.ஏதாவது விஷ பூச்சிக்கடிகள்ளுக்கு ஆளாக நேரிடும்.கனவன்-மனைவி உறவில் விரிசல் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகளால் தொல்லைகள் உருவாகும்.உறவினர்களின் தீடீர் பிரிவு,பாசமுள்ளவர்களின் பிரிவு,வீடு கட்டும் வேலைக்கு வாங்கிய வங்கிக்கடன் தலைவலியாக இ.எம்.ஐ கட்டுவது பெரும் பாடாக இழூபறி நிலையை உண்டாக்கும்.வெளிநாட்டு வருமானம் பற்றாகுறையை உருவாக்கும்.நாம் மேலே குறிப்பிட்ட ராசிக்காரர்கள் எல்லா விஷயத்திலும் அடக்கி வாசிப்பது நல்லது.நீங்க எல்லாம் தெரிந்தவராக இருந்தாலும் உங்க பல பரீட்சையை சனிபகவானிடம் காட்டிவிடாதீர்கள்.இந்த முறை சுமார் மூன்று வருடம் அதாவது 2017-டிசம்பர் வரை சனிபகவான் விருச்சிகத்திலேயே இருக்க போகிறார்.
No comments:
Post a Comment