Wednesday 14 January 2015

யோக்காலமே கடைசிவரை இல்லாமல் போவதேன்..?

ஒருவருக்கு சம்பாதிக்க்கூடிய நேரம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான் இருக்கும்.நன்றாக கையில் பணப்புழக்கம் இருக்கும்போது சேமிப்பதில் கவனம் செலுத்தாவிட்டால் பின்னர் வருத்தப்பட நேரிடும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுள்ள சிலர் பெரும் திட்டங்களுக்கு அவசரப்பட்டு செலவு செய்துவிட்டு பின்னர் சிரம்ப்படுகின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு-சனி-குரு-சுக்கிரன்-சந்திரன் போன்ற நீண்ட கால திசைகள் தன் முழு காலமும் யோகத்தை தந்திடாது.திடீரென்று ஏதாவது பாதிப்பை தந்திட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.யோகமென்று சொன்னார்கள் இப்படி இருக்கிறதேன்னு குழப்பமடைய நேரிடும்.ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது.இது எல்லோருக்கும் தெரியாது. பொத்தாம் பொதுவில் பலன் கூறுவார்கள்.ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராமல் போய்விடும்.இன்றைய வாழ்க்கை நிரந்தரமானதல்ல..அது எப்படியிருந்தாலும் மாற்றங்களை சந்தித்தே ஆக வேண்டும்.சந்தோஷமும் சங்கடமும் மாறி மாறி வருவதை காணலாம்.நாம்தான் அந்தந்த காலகட்டத்தை கடந்து வரவேண்டும்.இன்று போல் என்றும் இருப்பதற்கு வாய்ப்பே இருக்காது.நமக்காக நிர்ணயிக்கப்பட்டதை நாம்தான் அனுபவித்தாக வேண்டும்.நமது சுமையை வேறொருவர் சுமக்க மாட்டார்.

நல்ல யோகத்தை அனுபவித்தவர்கள்,திடீரென்று கடன் நெருக்கடியில் தவிப்பது இதனால்தான்.எப்போதும் இப்படியேதானிருக்கமென்று ஒரு குருட்டு நம்பிக்கையில் அலட்சியமாக இருந்துவிடுவார்கள்.கையில் பணப்-புழக்கம் இருக்கும்போது தேடி வந்து கடன் கொடுப்பார்கள்.நம் கையில் பணம் வற்றி ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது, கொடுத்த கடனை கேட்டு நெருக்கடி செய்வார்கள்.இது பலரின் அனுபவமாக உள்ளது.மேடு-பள்ளம் நிறைந்த இந்த வாழ்க்கையில் ஜோதிடரீதியான வழிகாட்டுதலோடு எதார்த்த்த்தை  உணர்வு பூர்வமாக அறிந்து செயல்படவேண்டும்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates