Thursday 29 January 2015

விருச்சிகம்-ராசி அல்லது லக்கினமா..? என்ன செய்யப் போகிறது ஏழரை..?

முகம் கழுவ முக்கால் மணி நேரம்,கால் கழுவ அரைமணி நேரம்,குளிக்க மூன்று மணி நேரம்,என தன் உடலை சுத்தமாக வைத்திருப்பதில் மிகுந்த அக்கறையுடையவர்கள் விருச்சிகத்தார்.தண்ணீர் கண்ணாடி போல் மின்ன வேண்டும்.சின்ன தூசி கிடந்தால் போதும் அந்த தண்ணீரை குடிக்க மாட்டார்கள்.அப்படி பட்டவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி,ஜீரண கோளாறு,கிட்னியில் கல்,கேஸ்ட்ரபுள்,அல்சர்,வாயுத்தொல்லை,வேலை செய்யும்போது வெறுப்பு,பெண்களாக இருப்பின் கர்ப்ப பை பிரச்சினைகள்,மாதவிடாய் கோளாறுகள்,மார்பக புற்று நோய் வேதனை.மூட்டு வலி,சுகர் மற்றும் இதயக்கோளாறுகள் என வாட்டியெடுக்கும்.சிலருக்கு வெளி நாடு சென்றும் நிம்மதி இருக்காது.வீடு கட்டியதில் அவசரபட்டு விட்டோமோவென்று எண்ணத் தோன்றும்.மாதா மாதம் வட்டி கட்டிக்கொண்டிருந்தால் சேமிப்பது எப்படி..? காலம் முழுவதும் வெளி நாட்டில் கிடந்து எவ்வித சுகத்தையும் காணலையேன்னு கவலை வரும்.உங்களை புரிந்து கொள்ளாதவர்களுடன் விரிசல் வர உறவில் பகை உண்டாகவும் காரணமாகும்.திருமணம் தடைபடும்,எல்லாம் ஏழரையினால்தானோ..?விருச்சிகத்தார்க்கு இப்போது உடல் உபாதை..கவனமாக இருங்கள்.நீங்க என்னதான் சுத்தமான ஆளாக இருந்தாலும் ஏழரை உங்களை அசைத்துதான் பார்க்கும்.பொறுமையும் தெய்வ வழிபாடும் முக்கியம்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates