Sunday 19 July 2015

பெண்ணுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றம்....

பெண் பருவமடைந்த பிறகு பல்வேறு உடல்நிலை மாற்றங்கள் உருவாகும்.இதை நன்கு புரிந்து செயல்படும் பெற்றோர்,உறவினர்,சக நண்பர்கள்,காதலர்,அலுவலக பணியாளர்கள் மற்றும் அந்த பெண்ணோடு ஒன்றி இணைந்து வாழ்கின்ற கனவர் யாராக இருந்தாலும் இதை அனுசரித்து போகாவிட்டால் பிணக்கும்,பிளவும்,பிரிவும் உருவாகிவிடும்.

எந்த நேரமும் ஒரு பெண் காதல் மூட் ஏற்பட்டபடி இருக்கமாட்டாள்.உடற்கூறு அப்படி இருக்காது.பொதுவாக பீரியட் என்று சொல்லப்படும் மாதவிடாய் சமயத்தில் வயிற்றுவலி வேதனையில் துடித்துக்கொண்டிருப்பாள்,அந்த நீங்க மரியாதையாக புரிந்து ஒதுங்க வேண்டும்,இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறி என்ன பேசுவது,என்ன திட்டுவது என்று தெரியாமல் போய்விடும் இது சிலசமயங்களில் பிரிவைக்கூட உண்டாக்கிவிடும்.

மாதவிடாய் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு பிறகுதான் உடல் சாதரணநிலைக்கு வரும்.அவள் உடல்உறவுக்கு ஏற்ற நிலை என்பது பார்வை,பேச்சு,சுறுசுறுப்பு,ஒருவித மகிழ்ச்சி கலந்த நக்கல் என ஒருவித கலகலப்பு தெரியவரும்.நீங்க வேலைக்கு கிளம்பி போகும் போது வரும்போது பூ வாங்கிட்டு வாங்க என்றால் நீங்க இன்று விருந்து சாப்பிடலாமென்று முடிவு செய்து கொள்ளலாம்.

இதைவிட்டு பெண்களின் மென்மை-தன்மையை ,உடற்கூறுகளின் மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு இயங்குதல் இடையூறுகளை ஏற்படுத்தும்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates